Tuesday, April 11, 2006

இன்றைய அரசியல்

கலைஞர் கருணாநிதி அவர்கள் இதுவரையில் டிவி இல்லாத ஏழை மக்களுக்கு ஒரு கலர் டிவி கொடுப்போம் என்றதும், அதிமுகவுக்கும் மதிமுகவுக்கும் குறிப்பாக வைகோ அவர்களுக்கும் பற்றிக் கொண்டு வருகிறது. கலர் டிவி கொடுக்கிறார்களே கேபிள் இணைப்பு கொடுப்பார்களா என்று மூச்சுக்கு மூச்சு மேடைக்கு மேடை கேட்டுக் கொண்டு இருக்கிறார். கலைஞர் கேபிள் இணைப்பும் முடிந்தால் கொடுப்போம் என்றதும் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருக்கு சில டிப்ஸ். கேபிள் இணைப்பு கொடுக்கிறேன் என்று சொல்கிறாரே, மின்சார கட்டணம் செலுத்தத் தயாரா? மின்சார கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமா? பொதுமக்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது சமைப்பது யார்? சமைத்துப் போட தயாரா? என்று கூட கேட்கலாம். அவருக்கு இன்னும் சில கேட்க மறந்து விட்டார். ரூபாய் 2க்குஅரிசி கொடுப்பேன் என்று சொல்கிறாரே பருப்பு கொடுப்பாரா? ஏழைகளுக்கு நிலம் கொடுக்கிறீர்களே விவசாயம் செய்து கொடுப்பீர்களா என்று கூட கேட்கலாம். என்ன சொல்வது கேட்பவர்கள் ‘கேணையர்கள்’ என்று நினைத்தால் எதை வேண்டுமானாலும் ஆக்ரோஷத்துடன் பேசலாம்.

2 comments:

Anonymous said...

Really cool stuff. U seems to be good at satire.

Keep posting such good stuff

Anonymous said...

அம்மா இலவசமா அரிசி கொடுக்கப் போறாங்களே அப்ப வைகோ என்ன சொல்வார்?