Saturday, September 06, 2008
எங்கு போய் முட்டிக்கொள்வது?








விநாயகர் சதுர்த்தி வந்தாலே பயமாக இருக்கிறது. நம்முடைய முழு முதல் கடவுள். ஓம்கார வடிவானவர். சித்திக்கும் புத்திக்கும் நாயகன். பிடித்து வைத்தாலே போதும் என்ற அளவில் எளிமையானவர். அரசமரத்தடியில் அமர்ந்துக்கொண்டு, வேண்டுவோருக்கு அருள காத்திருப்பவர்.
“கணானாம்த்வா கணபதிம் ஹவாமகே” என்று வேதம் கணபதியை போற்றுகிறது! சைவத்தில் சிவபெருமானுக்கே தடைகளை நீக்கி அருளியவர் அவர் என்று புராணம் சொல்கிறது. வைணவத்தில் கஜானனர் என்ற நாமத்துடன் மஹாவிஷ்ணுவின் சேனை முதலியாக இருப்பவர். இவ்வளவு ஏன், ஹிந்து மதத்துக்கு மாற்றானது என்று சொல்லப்பட்ட பௌத்த - ஜைன மதங்களில் கூட விநாயகர் உண்டு. ஸ்ரீலங்கா எடுத்து செல்லவிருந்த ரங்கநாதரை விபீஷனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பண்ணிவிட்டு மலையுச்சில் போய் அமர்ந்தவர். அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காக்கையாய் வந்து விடுவித்தவர் அவர். அத்தகைய விநாயகருக்கு இன்னமும் சில நாட்களில் கொடுமை நடக்க இருக்கிறது. அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்களை விட கேவலமாக நடக்கப் போகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் சாதாரணமாக புழங்கும் தேவையற்ற வார்த்தைகளுக்கெல்லாம் சண்டை பிடிப்பவர்கள், அறிக்கை விடுபவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அரசியல் வாதிகளின் சிலைகளை அங்கஹீனம் செய்யப்படும்போதெல்லாம் கொதிக்கும் மக்கள் இதற்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இந்துக்களை காப்பதற்காகவே முன்னணியில் இருப்பவர்களிடம் இந்த கொடுமைகளுக்கு ஏதும் பதில் உண்டா?
இராமாயணத்தில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.
இராமர் ஒருமுறை சந்தியாவந்தனம் செய்வதற்காக ஒரு ஆற்றங்கரையில் தன்னுடைய வில்அம்பை மணலில் நட்டுவிட்டு ஆற்றில் இறங்கி கைகால்களை சுத்தம் செய்ய சென்றாராம். திரும்பி வந்து அம்பை மணலி்ல் இருந்து எடுத்துப் பார்த்தால் அந்த அம்பில் ஒரு தேரை குத்துப்பட்டு இருந்ததாம். அப்போது இராமர் அந்த தேரையை பார்த்துக் கண் கலங்கிக் கேட்டாராம், “நான் அம்பை குத்தபோகும்போது நீ சத்தமிட்டுஇருந்தால் இந்த குற்றம் நேர்ந்திராது அல்லவா?” அதற்கு அந்த தேரை,”எனக்கு யாரும் தீங்கிழைக்க முற்பட்டால் ஸ்ரீராமா என்று உன்நாமத்தை விளிப்பேன். ஆனால் ஸ்ரீராமனே இவ்வாறு செய்யும்போது நான் யாரை அழைப்பேன்?” என்றதாம்.
அது போல இருக்கிறது. மாற்றுமதத்தவர் ஏதேனும் தீங்கிழைத்தால் நாம் பொங்கி எழலாம். செய்வதெல்லாம் சார்ந்த மதத்தினரே என்னும்போது எங்கு போய் முட்டிக்கொள்வது?
Tuesday, August 26, 2008
ஊருக்குள்ளே ஒரு அரசமரம்...
டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டிக்கொண்டிருந்தார்கள். காரணம்?சில ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ ஒரு பக்தர் (?) மர அடிபக்கத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் தெளித்து மரத்தில் மஞ்சள் தடவி குங்குமம் பூசிவிட்டார். சிலநாட்களில் யாரோ ஒரு சிறிய அம்மன் சிலையை வைக்க, பொதுமக்கள் கற்பூரம் காட்டி பரவசம் அடைந்தார்கள். சிறிய பூக் கடைகள் கற்பூரம் விற்கும் கடைகள் அவ்வபோது தோன்றி போலீஸ் விரட்டும்போது மறைந்துக் கொண்டிருந்தது.
இருந்த அம்மன் சிலை சிறியதாக இருப்பதாக யாருக்கோ தோன்றியிருக்க வேண்டும். மிகப்பெரியதாக ஒரு அம்மன் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வளவுதான் அங்கு ஒரு முழுக்கோயில் தோண்றிவிட்டது. அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. பொது மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கிய அந்த அம்மன், யாருக்கோ இடைஞ்சலாகத் தோன்றியிருக்க வேண்டும்.
அந்த அம்மன் சிலை நடைப்பாதையில் சற்றே குறுகலான இடத்தில் இருந்தபோதிலும், மற்ற இடைஞ்சல்களை காட்டிலும் போக்குவரத்துக்கு மிக்ப்பெரிய இடைஞ்சலாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த அரசமரம் மிகப்பெரியது, நடைப்பாதையை முழுமையாக அடைத்திருந்தது.
நேற்று காலை போலீஸ் படையின் உதவியோடு அந்த அம்மன் சிலை அகற்றப்பட்டது.
மாலையில் நான் அந்த வழியாகப்போன போது திடுக்கிட்டே
ன். அந்த அரசமரத்தடியில் புதியதாக மூன்று செங்கற்களை வைத்து, மஞ்சள் குங்குமம் பூசி கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் சில நாட்களில் அந்த செங்கற்களுக்குப் பதிலாக புதியதாக ஒரு அம்மன் சிலை தோன்றலாம். மீண்டும் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்படலாம். மீண்டும் ஒரு கோவில் கட்டப்படலாம்... மீண்டும் அந்தக் கோவில் இடிக்கப்படலாம்... மீண்டும்… மீண்டும்…Friday, August 22, 2008
அதற்காக இப்படியா ஒன்றுமில்லாமல்… சே!
இனிமேல் ஆகட்டும். நான் பார்ப்பேனா. ஹூஹூம். சரி என்னை விடுங்கள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை என்ன சொல்வது? இப்படியா? ஒன்றுமில்லாமல். சே! வெட்கமே இல்லாமல் எப்படித்தான் முடிகிறதோ இவர்களால்?
பட்டினத்தார் பாடியது போல “ காயமே இது பொய்யடா… காற்றடித்தப் பையடா…” என்பது நினைவுக்கு வந்தாலும், இந்த வெட்கம் கெட்ட மனசென்னமோ கேட்பதில்லை. ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று, எத்தனைமுறை ஏமாந்தாலும்… மீண்டும் மீண்டும் எத்தனையோமுறை…
நம்முடைய வேலையையை பார்த்துக்கொண்டு போகலாம். யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்றும் விட்டுப்போக முடியவில்லை. இந்த பொல்லாத மனசுக்கு பவித்ரம் என்பதே தெரியாது போல இருக்கிறது.
அட, நாம் தாம் இப்படி என்று நினைத்தால், நிறையபேர் இப்படித்தான் போல இருக்கிறது. இது கூட பரவாயில்லை. இதை சிலாகிக்கிறவர்கள் எத்தனைப் பேர். அடடா… அற்புதம் என்று பரவசப்படுவர்கள் வேறு.
இதைக்கூட விடுங்கள். புற்றீசலைப்போல எத்தனைப்பேர் கிளம்பிவிட்டார்கள் ஒன்றுமே இல்லாமல். இதெல்லாம் நல்லதற்கா என்று தெரியவி்ல்லை.
கொஞ்சம் விஷயத்தோடு வலைப்பூவில் எழுதுங்கப்பா…
Wednesday, August 13, 2008
பூட்டிய அறைக்குள் ப்ரேயர் பண்ணுங்கள்.

ஆலந்தூர் ஜோதிக்கும் ஆதம்பாக்கம் ஜெயலட்சுமிக்கும் அடிக்கடி செல்பவர்கள் நலன் கருதி இந்த செய்தியினை தெரிவிக்கிறேன்.
The Times of India, Chennai Edition 13-08-2008
Chennai: In what seems to be an act of moral policing, a special team from the Triplicane police station raided a mansion in Triplicane and arrested four persons, including three software professionals, for watching blue films in their room. Police claimed to have seized 57 digital video discs containing pornography from the room of three software professionals and seven more DVDs from the room of a mechanic.
The police team, which is now engaged in daily checks at lodges and mansions as part of security measures prior to Independence Day celebrations, raided a mansion on Triplicane High Road and arrested three software engineers in their late twenties, and a mechanic. The four were remanded in judicial custody.
Their ‘offence’ was watching blue films in their room, behind locked doors. “They had many pornography movie discs with them. Why should they have so many discs? There is a possibility that they might sell them in the market. That is why we arrested them,” S Lakshmi, deputy commissioner, Triplicane, said.
Police seem to have forgotten that such DVDs with pornographic content are available freely in markets like Burma Bazaar for just Rs 15 onwards. By selling 57 discs, the men could have made a maximum of Rs 1,000. “The claim of the police does not make any sense as the youth are paid a handsome salary,” another resident of the mansion said.
“The police have no right to intrude on us. We pay rent for our rooms and it is our private space. We are not criminals. We choose to stay in mansions because most landlords in the city refuse to rent their houses to bachelors. This incident is an example of police high-handedness,” Krishna Prabu, who stays in a mansion in Royapettah, said.
MORAL POLICING
Police claim to have seized 57 DVDs containing pornography from three software professionals
Seven more DVDs were seized from a mechanic
Porn DVDs are available freely in markets like Burma Bazaar for as low as Rs 15
By selling the 57 discs, the men could have made a maximum of only Rs 1,000
சென்னையில் நேற்று அதிரடியாக நான்கு பேரை போலீஸ் கைது செய்தது. காரணம் அவர்கள் ‘பலான படங்களை’ பார்த்துக்கொண்டிருந்தது. அதுவும் எங்கே? அவர்களுடைய மூடிய அறையில். போலீஸ் கூறிய காரணங்கள், அவர்களிடம் 57 பலான டிவிடி தட்டுக்கள்இருந்தது . எதற்கு இத்தனை டிவிடிக்கள். இதை அவர்கள் விற்பனை செய்வதனால் தானே என்பதாகும். The Times of India, பர்மா பஜாரில் ரூபாய் 15க்கு இத்தகைய ‘பலான படங்கள்’ இலகுவாக கிடைப்பதை ஏனோ போலீஸ் மறந்துவிட்டது. 57 டிவிடி தட்டுக்களை விற்பதன் மூலம் இந்த கணிப்பொறியாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடியது ரூபாய் 1000 மட்டுமே என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
எது எப்படியோ. படம் பார்த்த அந்த நான்குபேர் தற்போது சிறைச்சாலையில். தாழிட்ட அறைக்குள் தனியாக உடை மாற்றிக்கொள்வதுகூட பயமாக இருக்கிறது.
Thursday, April 17, 2008
எப்படி இருந்த நான்...
என் மனைவிக்கு திருமணத்தின் போதே சற்று கனத்த சரீரம். ஏறத்தாழ என்னைப்போல. எங்கள் இருவருக்கும் ஏகப்பொருத்தம். உருவத்திலும் எண்ணத்திலும் மற்ற எல்லாவற்றிலும். நிறையமுறை என்னை வியக்கவைத்த உண்மை நான் சொல்ல வந்ததை அவள் சொல்வதும், என் மனைவி நினைப்பதை நான் சொல்வதும். இத்தனை இருந்தும் என் மனைவியிடம் இருக்கும் பலவீனம் சாதாரண விஷயங்களுக்குக்கூட டென்ஷன் ஆவது தான். தானும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்கி... பிள்ளைகள் படிக்கவில்லை என்றால், வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றால், அலாரம் வைத்த பிள்ளைகள் எழுந்திருக்கவில்லை என்றால், இவ்வளவு ஏன்? சாதாரண பென்சிலை மறந்து பள்ளிக்குப் போய்விட்டார்கள் என்றால் கூட அவ்வளவு தான். டென்ஷனில் இரண்டுபட்டுப் போகும் வீடு. என் பாடும் திண்டாட்டம் தான். (ஹமாம் சோப் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் சாதாரணம்!)
இத்தகைய டென்ஷன் பார்ட்டிகள் நேரத்துக்கு சாப்பிட்டார்கள் என்பது உலக நியதிகளில் கிடையாது. அதுகூட பரவாயில்லை. நிறைய நேரம் கவலைப்பட்டு சாப்பிடாமலேயே கழித்த நேரங்கள் பல உண்டு. நானும் கூடுமானவரை சொல்லிப்பார்த்துவிட்டு விட்டுவிட்டேன். எனக்கு உருப்படியான வேலை நிறைய இருக்கிறது. அங்குதான் நான் தவறிழைத்தேன்!
ஒரு நாள் இரவு திடீரென நெஞ்சு பிடிக்கிறது வலிக்கிறது என்று அவளாகவே ஆறிய பாலில் சிறிது சர்க்கரையை போட்டு குடித்து சிநிது நேர வேதனைக்குப் பிறகு சற்று தெளிவடைந்தாள். அவளாகவே கண்டுபிடித்த வைத்தியம். எப்போதாவது வந்துக் கொண்டிருந்த வலி அடிக்கடி வர ஆரம்பித்தது. சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மொத்தமும் வாந்தி.. சாப்பாட்டை விடுங்கள். சில சமயம் காபி சாப்பிட்டால் கூட வாந்தி. அரண்டு போனேன். அக்கம் பக்கம் இருந்த மருத்துவர்களிடம் படையெடுத்தேன். இரண்டு நாட்களில் சரியாகிவிடும் அவர்கள் கொடுத்த மருந்து மாத்திரை. எதற்கும் அசையவில்லை. நாளாக நாளாக சாப்பாடு கரண்டி அளவில் இருந்து ஸ்பூன் அளவுக்கு குறைந்து பின் அதுவும் குறைந்து திரவமாகி அந்த திரவமும் வாந்தியாகி...
இந்த இரண்டு ஆண்டுகளில் 25 கிலோ எடை குறைந்து, பிந்துகோஷ் போல இருந்த என் மனைவி (அந்தக் கால) கமலாகாமேஷ் போல ஆகிப்போனாள். நான் ஆடிப் போய்விட்டேன். என்னுள் குற்ற மனப்பான்மை குறுகுறுக்க நான் மிகவும் சிறுத்துப் போனேன். போதாதகுறைக்கு என் எடை குறையாமல் அப்படியே இருக்க, காண்போர் - தெரிந்தோர் எல்லாம் என்னை ஏளனமாகப் பார்த்து மிகுந்த கரிசனத்தோடு “என்ன சார் உங்கள் மனைவிக்கு சாப்பாடு போடாமல் எல்லாவற்றையும் நீங்களே சாப்பிட்டு விடுவீர்களா?” என்று கேட்க ஆரம்பிக்க, நான் வாழ்க்கையே வெறுத்துப்போய், உடனடியாகபோர்க்கால நடவடிக்கை எடுத்தேன்.
அரும்பாக்கத்திலிருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துப் போனேன். அந்த மருத்துவனையின் தலைமை மருத்துவர் என்ன விஷயம் என்று விசாரித்தார். அடுத்த கணம் ‘எப்போதும் போல சோதனைகள்’ என்று அவர் சொல்ல அதை ஒரு செவிலியர் எழுத தலைமை மருத்துவர் தன் கையெழுத்தை கிறுக்க எனக்கு கிறுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அந்த மருத்துவசோதனைகளில் பல தேவையில்லாதது என்று பாமரன் ஆகிய எனக்கே தெரிந்தது. என்ன தெரிந்து என்ன செய்ய?
இதெற்கெல்லாம் தலையானது, என் மனைவிக்கு செய்யப்பட்ட ‘பேரியம் டெஸ்ட்’ தான். இதை செய்ய ஒரு தனி மருத்துவரை அழைத்தார்கள். (அந்த மருத்துவர் ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக தெரிந்தார்). என்ன விஷயம் என்று என்னைக் கேட்டு தெரிந்துக் கொண்டதும், என்னைப் பார்த்து “என்ன சார்... இப்படி பண்ணிட்டீங்களே” என்றார். ஏற்கெனவே குற்ற மனப்பான்மையில் இருந்த நான் மேலும் குறுகிப் போனேன். “இல்ல சார்... வந்து...” என்று முனங்கினேன். அந்த மருத்துவர் என்னை விடுவதாக இல்லை. “நீங்க எல்லாம் படிச்சி என்ன லாபம்” என்றார் காட்டமாக. நான் அவமானமாக, அழுகை வராதகுறையாக உணர்ந்தேன். என்ன செய்வது? முன்பே கவனிக்காதது என் தவறு தான். “சரி... சரி... டெஸ்ட்டுக்கு பணம் கட்டிட்டீங்களா” என்று நிச்சயப்படுத்திக்கொண்டு டெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டார். ஒரு செவிலியர் என் மனைவின் நகைகளை தாலி உட்பட என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாள். எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஆண்டவனை பிராத்தனை செய்தேன். உள்ளே என் மனைவியை அந்த செவிலியரும் மருத்துவரும் ஏதோ அதட்டுவது எனக்கு கேட்டது. கையாளாகதவனாக உட்கார்ந்திருந்தேன். சற்று நேரம் கழித்து என் மனைவி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உயிர்க்கோழி போல வெடவெடவென்று வந்தாள். அவள் கண்களில் நான் அவளை சித்திரவதை செய்வதுபோல ஒரு குற்றச்சாட்டு தெரிந்தது. என்ன நடந்தது என்று கனிவுடன் கேட்டேன். “என்னங்க பேரியம் கொடுத்துட்டு என்னை படுக்கவைச்சு எக்ஸ்ரே எடுத்தால் எப்படிங்க? ஏற்கெனவே என்ன சாப்பிட்டாலும் நிக்காமல் வாந்தி வந்துடுது. ஏன் வாந்தி எடுக்கறேன்னு என்னை திட்ராங்க. நான் என்ன செய்வது?” என்றாள் அழமாட்டாகுறையாக. “இந்த ஆஸ்பத்திரி வேண்டாங்க” என்றாள் முத்தாய்ப்பாக.
வெளியே வந்த அந்த மருத்துவர், “என்ன சார், இவங்க.” என்று ஏதோ சொல்ல வந்தவர், “சரி.. சரி.. நாளைக்கு வந்து ‘ரிப்போர்ட்’ எல்லாம் வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டு, ஏதோ செத்த எலியைப் பார்ப்பது போல எங்களைப் பார்த்துவிட்டு போய்விட்டார்.
மறுநாள் என் மனைவியின் அதீத எதிர்ப்பையும் மீறி அந்த மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்து வந்தேன். எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்த அந்த தலைமை மருத்துவர் (இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்!) சினிமா படங்களில் வரும் மருத்துவர்களைப் போல கண்ணாடியை கழட்டிக்கொண்டு சற்று யோசனையில் இருந்துவிட்டு, “அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும்” என்று சொல்ல எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என் மனைவி “வாங்க போலாம், ஆண்டவன் விட்ட வழி” என்று எழுந்துக் கொண்டாள்.
ரூபாய் பதினைந்தாயிரம் போனதுகூட பெரிய விஷயமாகப் படவில்லை. இதுபோன்ற பெரிய மருத்துவமனைக்கு அழைத்துப்போய் அவமானப்பட்டு என்னைநானே ஏமாற்றிக் கொண்டதுதான் எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அப்போதுதான் என்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், நான் படும் அவஸ்தையைப் பார்த்து “ஏன் சார், எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் இருக்கிறார். அவர் ஏதாவது செய்வார்” என்று சொல்லி அங்கு போகுமாறு பணித்தார். மீண்டும் ஏகமாய் என் மனைவியை சமாதானப்படுத்தி அங்கு அழைத்துச் சென்று, இரண்டு நாட்களில் முடிய வேண்டிய வேலையை இரண்டு வாரங்களுக்கு இழுத்தடித்து ஏதும் நடக்காமல், உடலளவில் சோர்ந்துப் போன என் மனைவியை மனதளவிலும் நோகடித்து... நானும் நொந்துப் போய் நடைப்பிணமாய் ஆகிப்போனேன்.
நான் குமுதம், விகடன் இன்னும் இன்னப்பிற சஞ்சிகைகளை அதிகம் படிப்பவன் அல்ல. நான் படித்த இந்த பத்திரிக்கைகளின் பக்கங்கள் மிஞ்சிப் போனால் மளிகைக் கடைகளில் மடித்துக் கொடுப்பது தான். இந்தப் பத்திரிகைகளை படிப்பதை விட உருப்படியான வேலைகள் எனக்கு இருக்கிறது. அலுவல் வேலையாக பயணம் செய்யும்போதும் கூட சஞ்சிகைகளைவிட தினசரிகளை அதிகம் படிப்பவன் நான். அப்படிபட்ட நான் அலுவல் நிமித்தமாக டெல்லி செல்ல நேரிட தினசரி பத்திரிக்கைகள் ஏதும் கிடைக்காமல் ஒரு வாரஇதழை வாங்க நேரிட்டது ஒரு அதிசயம் தான். அதிசயங்கள் தினந்தோறும் நடப்பதில்லை. அந்த வாரஇதழை ஒரு எழுத்து விடாமல் படித்து முடித்துவிட்டு விளம்பரங்களை படிக்கும்போது அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது! “விருந்தா…மருந்தா?” என்று தலைப்பிட்டு “மெடிந்தியா” (MedIndia) மருத்துவமனையின் விளம்பரம் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நடையில் எழுதப்பட்டிருந்தது. அவ்வளவும் என் மனைவியின் வலிகள்… அவஸ்த்தைகள்…. எனக்கு அப்போதே ஊருக்குத் திரும்பிப்போய் என் மனைவியிடம் அந்த விளம்பரத்தை க் காட்டவேண்டும் என்று என் மனம் பரபரத்தது.
ஒருவாரம் கழித்து நான் வீடு திரும்பியதும் நான் செய்த முதல் காரியம் என் மனைவியை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தான். (அது ஒன்றும் சாதாரணமான காரியமாக இல்லை. என் மனைவி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மேல் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாகியிருந்தது!) சுதந்திரதின நன்னாளில் என் மனைவியை அந்த மருத்துவமனையில் சேர்த்தேன். நம்பினால் நம்புங்கள்! ஒரே நாள்!! என்டொஸ்கொபி பலூனீங் (endoscopy ballooning) என்ற பலூன் டைலடேஷன் (Balloon Dilatation)முறையில் உணவுக்குழாயில் ஒரு பலூனை செலுத்தி குறுகலான உணவுக் குழாயை விரிவுப்படுத்தி...
என் மனைவிக்கு ஏற்பட்டிருந்த நோய் அக்கலெஸியா (Esophageal Achalasia) உணவுக்குழாய் சிறுத்துப்போகும் நோய். உலகம் முழுவதும், ஒவ்வொரு வருடமும் லட்சத்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்களாம். இந்நோய் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள கீழ் கண்ட உரலை சுட்டவும்.
மருத்துவமனையிலேயே என் மனைவிக்கு ஒரு டம்ளர் பழச்சாறு வாங்கிக் கொடுத்தேன். அவள் அதை சாதாரணமாக சாப்பிட்டபோது என் வயிறு நிரம்பிப்போனது.
சிகிச்சைமுடிந்து இப்போது ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது. என் மனைவி தற்போது நன்றாகத் தேறி வருகிறாள். அவள் சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கும்போதும் நான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால், “போங்க, எனக்கு வெட்கமாக இருக்கு!” என்று அகன்றுவிடுவாள். கமலா காமேஷ் போல ஆகிவிட்டிருந்த என் மனைவி தற்போது பிந்துகோஷ் போல அல்லாவிடினும், உடல் தேறிவிட்டது தெரிகிறது.
நேற்று என் மனைவி கீழே உட்கார்ந்துக்கொண்டு கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தவள் என்னிடம் “வரவர என்னால் கீழே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு பெருத்துவிட்டது” என்றாள். அப்போது நான் சொன்னேன்,
***
Wednesday, February 14, 2007
காதல் போயின்... மினி தொடர் கடைசி பகுதி
மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்... போலீஸ் ஸ்டேஷனில் கவிதா... இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி என்கிறார். லாயர் அங்கிளின் உதவியோடு விளக்கம் எழுதிகொடுத்துவிட்டு குழப்பத்தோடு வீடு வந்து சேர்கிறான் ஆனந்த். தூங்கி எழுந்தால் போனில் கவிதா!
போனில் கவிதா! விதி துரத்துகிறதா? பயமாக இருந்தது ஆனந்துக்கு. எதற்கு இவள் மறுபடியும் போன் செய்கிறாள்? எச்சரிக்கையாகத்தான் இவளை கையாளவேண்டும்.
“என்ன கவிதா? என்ன விஷயம்?”
“இத்தனை அமளியிலும் என்ன விஷயம்னு எப்படி கேட்க முடியுது ஆனந்த்?”
“கவிதா என்னை நம்பு. எனக்கு என்ன நடந்ததுனே தொியலை. நான் வேண்டும்ன்னே பண்ணலை. எனக்கு உயிர் பிழைக்கணும்னு தோணிண உடனே உன்னைத்தான் தேடினேன் கவிதா. Please என்னை நம்பு.”
“என்னை இதெல்லாம் நம்பச் சொல்றியா ஆனந்த்?”
“God promise கவிதா. உன்னை எப்படி புரியவைக்கறதுனு எனக்குத் தெரியலை”
“நாம இன்னிக்கு சாயந்திரம் 6 மணிக்கு வழக்கமா சந்திக்கிற restaurant -ல meet பண்ணலாம். நீ தவறாம வந்தா உன்னை நம்பறத்துக்கு try பண்றேன்.” கவிதா போனை வைத்துவிட்டாள்.
ஆனந்த் என்ன செய்வது என்று யோசித்தான். வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். போலீஸ்ஸ்டேஷனில் இருக்கும் complaint -ஐ வாபஸ் வாங்க வைக்க வேண்டும். கொஞ்சம் நடிப்புத்திறமையை காட்டினால் கவிதா நம்பிவிடுவாள். எத்தனைபேரை நம்ப வைத்திருக்கிறேன். ஆண் அழுதால் தாங்குவாகளா பெண்கள்? Sentimental -ஆ பேசினா கவுந்திடமாட்டாகளா? எத்தனைப் பேரை கவுத்திருக்கிறேன். கவிதாவை இன்றைக்கு அழுது ஒழித்துவிட வேண்டியது தான். ஆனந்த் மாலை 6 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
மாலை 6:10க்கு restaurant -க்கு கவிதா வந்தபோது ஆனந்த் முன்னதாகவே வந்து காத்திருந்தான். ஒரு மூலையில் டேபிள் பிடித்திருந்தான். கவிதாவை கண்டதும் கையசைத்தான். டேபிள் மீது அவனது mobile phone.
கவிதா மௌனமாக போய் அவனருகில் உட்காந்தாள். வந்த சர்வரிடம் இரண்டு coca-cola ஆடர் செய்தாள். சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்காந்திருந்தாகள். பிறகு கவிதா ஆனந்தின் கண்களைப் பாத்துக் கொண்டு, “ஏன் ஆனந்த்? ஏன் இப்படி பண்ணினே?”
“அது தான் சொன்னேனே கவிதா. இப்படி ஆகும்னு நானே நினைக்கலை. என்னோட கட்டு அவிழ்ந்ததும் எனக்கு பயமாயிடுச்சு. வாழணும்னு நினைப்பு வந்துடுச்சு. உடனே உன்னைத் தேடினேன். நீ கிடைக்காமல் நான் அழுத அழுகை எனக்குத்தான் தெரியும்”
“So, உனக்கு நீச்சல் தெரியும் இல்லையா?
இந்தக் கேள்வியை ஆனந்த் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. “வந்து ஏதோ கொஞ்சம் தெரியும். அதனால தானே நான் நம்ப இரண்டுபேரையும் கயிற்றால கட்டிவிடச் சொன்னேன். தப்பித்தவறி நான் பிழச்சி நீ போயிடக்கூடாதுன்னு தான் கயிற்றால கட்டிக்கிட்டு...”
“அது சரி. நீ எப்படி?”
“நான் S.I.E.T collegeல படிச்சப் பொண்ணு”
“So?” என்றான் ஒன்றும் புரியாமல்.
‘சென்னையிலேயே swimming pool இருக்கிற women’s college என்னோடது. எங்க காலேஜ்ல swimming compulsory’. என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் ‘பச்’ என்றாள் சுவாரசியம் இல்லாமல். “எப்படியோ பிழைச்சேன்” என்னும் போது ஆனந்தின் mobile phone சிணுங்கியது. நம்பரைப் பாத்த ஆனந்த் திடுக்கிட்டான். ஷீலா!. மனதில் bulb எரிந்தது.
“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சற்றுதூரம், கவிதாவுக்கு கேட்காத தூரம் சென்றான். அவன் திரும்ப வந்தபோது இருவருக்கும் coca-cola காத்திருந்தது. கவிதா அந்த coca-colaவையே வெறித்துப் பாத்துக்கொண்டிருந்தாள். “sorry கவிதா என்னுடைய old friend” என்று சொல்லிவிட்டு coca-cola ஒரே மூச்சில் குடித்தபின் கேட்டான் “இப்போ எங்கேயாவது போலாமா கவிதா? சினிமா ஏதாவது?”
“எனக்கு அந்த முட்டுக்காடு பாலத்துக்கு மறுபடியும் போகணும்னு ஆசையா இருக்கு ஆனந்த். போலாமா?” ஆனந்துக்கு சற்று சந்தேகம் வந்தது.
“முட்டுக்காடுக்கா எதற்கு?”
“இல்ல, ஆனந்த் நீங்க என்னைவிட்டு பிரிய முயற்சி பண்றீங்களோன்னு நினைச்சுத்தான் போலீஸ் கேஸ் எல்லாம் கொடுத்தேன். இப்போ நல்லா தெரிஞ்சிபோச்சு எல்லாம் என் தப்புதான்னு. அதான் கொஞ்ச நேரம் முட்டுக்காடு பாலத்துக்குப்போய் பேசிட்டு அப்படியே வழியில் போலீஸ் ஸ்டேஷன் போய் என்னுடைய complaintயும் வாபஸ் வாங்கிட்டு வந்துடலாம்னு..”
ஆனந்துக்கு இது நல்லதாகப் பட்டது. இந்தப் பொண்ணை இப்போது விட்டால் மனசு மாறி... நமக்கும் காலம் கடத்துவது நல்லதல்ல என்று பட்டது.
“முட்டுக்காடுக்கா சரி. நீ ஆசைபடற. அப்படியே நம்ப கல்யாணம் எங்கேன்னு அங்கேயே பேசிக்கலாம்” என்றான் சற்று உற்சாகத்துடன். அவர்கள் முட்டுக்காடு வந்தபோது மணி 8 ஆகிவிட்டிருந்தது. வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல் இருந்தது. நேற்று நிறுத்திய அதே இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான் ஆனந்த். கவிதா நினைத்துக் கொண்டாள். ‘நேற்றைக்கும் இன்றைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?’
“என்ன கவிதா என்ன யோசனை?”
“ஒன்னுமில்ல. நேத்தைக்கும் இன்னிக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். நேத்து சாகத்துடிச்சோம். இன்னிக்கு வாழ ஆசைப் படறோம். சரி கல்யாணத்தை எங்க வைச்சுக்கலாம் எப்ப வைச்சுக்கலாம்?”
“கவிதா போலீஸ் ஸ்டேஷன்ல complaint ஐ வாபஸ் வாங்கிட்டு அப்படியே நேரா கோவிலுக்குப் போய்..”
“அது சரி எந்த கோவில் இந்த நேரத்தில் கல்யாணத்துக்கு திறந்து இருக்கும்? நேரம் காலம் எல்லாம் பாக்க வேண்டாமா?”
“இல்ல கவிதா நான் முடிவு பண்ணிட்டேன். இப்பவே நீ தாலி கட்டுன்னா கூட நான் ரெடி” என்ற ஆனந்த் “என்னவோ தெரியலை கொஞ்ச நேரமா தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. நெஞ்ச கரிக்குது”. என்றான்.
அவன் நிற்கவே சற்று தடுமாறுவது தொந்தது. கவிதா அதை கண்டுக் கொள்ளாமல் “ஆனந்த் அந்த நிலா வெளிச்சம் பாலத்துக்கடியிலே எவ்வளவு நல்லா இருக்கு பாரேன்!” என்றாள்.
ஆனந்த் மிகுந்த பிரயாசைப்பட்டு பாலத்திலிருந்து எட்டிப்பாக்க முயலும்போது அப்படியே தடுமாறி மேலிருந்து தண்ணீல் விழுந்தான். விழுந்தவன் மிகவும் பிரயாசைப்பட்டு நீச்சலடிக்க முயல முடியாமல் சோர்ந்துப் போய் மூழ்குவது தெரிந்தது. அவன் மூழ்கிய இடத்திலிருந்து வட்டவட்டமாய் நீரலைகள் பரவி கடல் அலைகளோடு கலந்தது.
நிலா வெளிச்சம் பாக்க ரம்யமாகத் தொந்தது. கடலில் நிலா தீற்றலாகத் தெரிந்தது. கடலலைகள தட்..தட்டென்று பாலத்தடியில் மோதும் சத்தம் சற்று சங்கீதமாகக்கூட இருந்தது. கடல் காற்று சற்று ஈரப்பசையுடன் இனம்புயாத மணத்துடன்... இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இந்த கடல் தான் எவ்வளவு அழகு! எத்தனை கம்பீரம்!! எவ்வளவு பிரம்மாண்டம்!!!
கவிதா அவன் மூழ்குவதையே கண்கொட்டாமல் பாத்துக் கொண்டிருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து விஷம் என்று சிகப்பு எழுத்தில் எழுதியிருந்த சிறிய குப்பியை எடுத்தாள். “thank you coca-cola” என்று தண்ணீல் வீசியடித்தாள். அது யாருக்கும் அதிக சத்தம் கேட்காமல் ‘க்ளக்’ என்று முழ்கியது. கைப்பையில் இருந்த கடிதங்களை எடுத்தாள். அவளும் ஆனந்தும் அவகள் பெற்றோகளுக்கு எழுதிய, அவள் தபாலில் சேர்க்காத கடிதங்கள். தன்னுடைய கடிதத்தை மட்டும் சுக்கு நூறாகக் கிழித்து தண்ணீல் வீசியெறிந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் வழியில் ஆனந்துடைய கடிதத்தை தபால் பெட்டியில் சேர்த்தாள். “sorryடா ஆனந்த். என் வழி தனி வழி”. வழியில் எதிர்பட்ட ஆட்டோவில் ஏறி வீட்டை அடைந்தபோது மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீட்டு வாசலில் அம்மா. “எங்கடி போயிட்ட?” என்றாள் பதறிப் போய்.
“முக்கியமான உயிர் போற வேலை” என்று முணுமுணுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கப் போணாள். நாளைக்காலை ‘marie stoppes clinic’ போகவேண்டும் என்று நினைத்தவாறே தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை பத்து மணிக்கு முட்டுக்காடு படகுத் துறையில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திலிருந்த ஒருவன் ‘பாவம் சின்ன வயசுப்பா’ என்று பரிதாபப்பட்டான். ‘போலீஸ்க்கு சொல்லியாச்சு. இப்போ வந்திருவாங்க’ என்றான் இன்னொருவன். அந்த சிறு கூட்டத்தின் நடுவில் ஒரு கால் மடங்கி முகமெல்லாம் வீங்கி வாயில் நுரை தள்ளி திறந்த கண்களில் ஈ மொய்க்க... யாரோ ஒரு பரோபகாரி தன்னிடம் இருந்த துண்டால் பிணத்தை மூடினான்.
மறுநாள் தினமலர் பத்திரிக்கையில் எட்டாம்பக்கம் மூலையில் சின்னதாக ஒரு பெட்டிசெய்தி வந்திருந்தது.
வாலிபர் தற்கொலை
சென்னை: முட்டுக்காடு பாலத்திலிருந்து ஒரு வாலிபர் கடலில் குதித்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். கடலில் குதிக்கும் முன்னர் அவர் விஷம் அருந்தியிருப்பது தொிய வந்துள்ளது. அந்த இளைஞன் பெயர் ஆனந்த் என்பதும் அவர் ஒரு பிரபல தொழிலதிபாின் ஒரே மகன் என்பதும் தொியவந்துள்ளது. அவருடைய தந்தைக்கு இறக்கும் முன்னர் எழுதிய கடிதத்தில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் காரணம் என்று தொிகிறது. விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த இளைஞர் ஏற்கனவே ஒருமுறை தன்னுடைய கைகால்களைக் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தொிவித்தார். அந்த முயற்சியில் வெற்றிப் பெறாததால் இம்முறை விஷம் அருந்திவிட்டு கடலில் குதித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
- : முற்றும் : -
Wednesday, January 31, 2007
காதல் போயின்...2 (மினி தொடர் பாகம் 2)
மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்...
ஆனந்த் உணர்வுக்குவர சற்று நேரம் பிடித்தது.
“இங்கே ஆனந்த்ன்றது யாரு?” சரியான போலீஸ் தோரணை.
“நா.. நான் தான்”
“இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டியாரச் சொன்னார்”
“ஏன்? எதுக்கு?”
“அதெல்லாம் தெரியாது. ஸ்டேஷனுக்கு வந்து தெரிஞ்சிக்குங்க”
“விடிஞ்சதும் வரேன்”
போலீஸ்காரர் குரல் மாறியது. “யோவ். முதல்ல ஜீப்ல ஏறுயா”
ஆனந்த் ஆடிப்போனான்.
“டிரெஸ் மாத்திகிட்டு வந்துடரேன்” என்றான் கீழ் ஸ்தாயில்.
“சீக்கரம் ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார் போலீஸ்.
ஆனந்துக்கு என்ன ஏதுவென்று புரியவில்லை. கவிதாவுடைய dead-bodyயை இதற்குள் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. ஒருவேளை தப்பி பிழைத்திருப்பாளோ? இல்லையே! அவள் உள்ளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததே. வந்து காப்பாத்தக்கூட யாரும் அருகில் இல்லையே!
அந்தக் குழப்பத்தோடு family லாயர் தினேஷ்க்கு போன் செய்தான். ஐந்து ரிங் அடித்தப்பின்பு லாயர் தினேஷ் அரைகுறையான தூக்கத்துடன் ‘ஹலோவ்’ என்றார்.
ஆனந்த் அவரிடம் போலீஸ் தன்னை அழைத்துக்கொண்டு போக வந்திருப்பதை அழாதகுறையாக தெரிவித்தான்.
“என்ன விஷயம்? தப்புதண்டா ஏதாவது செஞ்சியா என்ன? சிங்கப்பூரில் இருக்கிற உங்கப்பன் கேள்விபட்டா என்னை கொன்னுடுவான்”
“இல்லை அங்கிள். நான் எதுவும் பண்ணலை”
“சரி சரி. நீ அவங்களோட போ. நான் போலீஸ் ஸ்டேஷன் வரேன்.”
ஆனந்த் டீசர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வீட்டு வாசலை அடைந்தபோது போலீஸ் கடுகடுவென்று இருந்தார்.
“எவ்ளோ நேரம்யா. அப்படியே ‘டிமிக்கி’ குடுக்கலாம்னு பாக்கறியா?”
ஆனந்துக்கு என்ன ஏது என்று யூகிக்க முடியாவிடினும் ஏதோ விபரீதம் என்று உ.கை.நெ.கனியாக புரிந்தது. லாயர் அங்கிள் சீக்கிரமாக வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டு ஜீப்பில் ஏறினான்.
ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது அதிகாலை மணி 3 ஆகிவிட்டிருந்தது.
வானம் குளிருக்கு மேகத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளி பனிபடுகை ஊடே சன்னமாகத் தெரிந்தது. விழித்திருந்த யாவிலும் இரவுப் பணி செய்த களைப்பு தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷனை ஒட்டிய டியூப்லைட்டின் வெளிச்சம் அதன் கம்பத்துக்கே போதுமானதாக இல்லை. அருகில் இருந்த டீ கடையை திறக்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த நாயர் அநியாயத்திற்கு பாலில் தண்ணீரை விளாவிக் கொண்டிருந்தார். சைக்கிளில் சென்ற நைட் ஷிப்ட் முடித்த இருவர் தங்கள் சூபவைசரை கெட்ட வார்த்தையில் சத்தமாகத் திட்டிக்கொண்டு சென்றார்கள் ஒதுங்கிய ஒற்றை நாய் ஜீப் அருகில் வந்துவிட்டு போலீஸ் லட்டி பயத்தில் வேகமாக எட்டிச் சென்றது.
“உள்ள போய்யா” என்றார் போலீஸ். கொஞ்சம் விட்டால் கழுத்தை நெட்டித் தள்ளுவார் போலிருந்தது. உள்ளே நுழையும்போது லாயர் தினேஷ் எதிர்பட்டார்.
“எதுவும் கவலைப்படாதே. எல்லாத்தையும் இன்ஸ்பெக்டாிடம் பேசிட்டேன். அது சரி அந்த பொண்ணை ஏண்டா கொலை பண்ற லெவலுக்குப் போனே?”
ஆடிப்போணான ஆனந்த். “எந்தப் பொண்ணு?”
“அது சரி. ஒண்ணு ரெண்டுன்னா ஞாபகம் வைச்சுப்பே!”
“உள்ள போய்யா” என்றார் போலீஸ் மறுபடியும்.
“வாய்யா மன்மதா” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. “பயங்கரமான ஆளய்யா நீ. உன்னையெல்லாம் straight- ஆ encounter -ல போட்டுத் தள்ளணும்”
“இன்ஸ்பெக்டர். நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்றார் லாயர்.
“மொதல்ல இந்த லாயரை போட்டுத் தள்ளணும்” என்று முணுமுணுத்தவாறே, “ஏம்மா லட்சுமி அந்தப் பொண்ணை இட்டாமா” என்றார் வெறுப்புடன்.
அந்தப் பொண்ணு என்றதும் ஆனந்த் நிஜமாகவே அதிர்ந்துப் போணான். என்ன எப்படி என்று யோசிப்பதற்குள் உள்ளிருந்து கவிதா பெண் போலீஸ் துணையுடன் சற்றே ஈரத்தலையுடன் ஈர உடையுடன் உள்ளிருந்து வெளியே வந்தாள். ஆனந்தை கண்ணுக்குள் பார்க்க முற்பட்டாள். ஆனந்த் தலையை தாழ்த்திக் கொண்டான்.
“இந்தப் பொண்ணை நீ கொலை செய்ய முயற்சி செய்ததாக complain செய்திருக்காங்க. இதுக்கு நீ என்னா சொல்ற?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“இன்ஸ்பெக்டர் சார் இந்தப் பையனும் அந்தப் பொண்ணும் தற்கொலை பண்ணிக்க பாத்திருக்காங்க. அதுல இவன் முதல்ல பொழச்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு அப்புறம் பொழச்சு எழுந்து பாத்திருக்கிறாங்க. இவன் இல்லாததனால கொலை அது இதுன்னு...”
“லாயர் சார். பையனை enquiry பண்ணும்போது நீங்க கொஞ்சம் சும்மா இருங்க”
“பையன் சார்பாத்தான் பேசறேன்”
“அதெல்லாம் கோர்ட்ல வைச்சுகங்க. நீங்க இது போல பேச ஆரம்பிச்சா பையனை இப்பயே கொலை முயற்சி அது இதுன்னு உள்ளத் தள்ள வேண்டி வரும். நான் இப்போதைக்கு 309ல விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். அநாவசியமா என்னை 120,307ல எல்லாம் கேஸ் போட வைச்சிராதிங்க. 10 வருஷம். non-bailable வேற. தெரியுமில்ல? தம்பி நீ சொல்லு இன்னா நடந்துச்சு?”
----------------------------------------------------------------------------------------------------------------------------
IPC 309. Attempt to commit suicide: Whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, shall he punished with simple imprisonment for a term which may extend to one year 151[or with fine, or with both].
IPC 307. Attempt to murder : Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty or murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 104[imprisonment for life], or to such punishment as is here in before mentioned.
ஆனந்துக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி கோவையாகச் சொல்வது என்று புரியாமல் சற்று மௌனமாக இருந்தான். பிறகு நிதானப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தான்.
“சார், நானும் கவிதாவும் lovers சார். வெவ்வேற ஜாதி. எங்கப்பாவும் சாி அவள் அப்பாவும் சாி ரொம்பவும் prestige பாக்கறவங்க. அடுத்த ஜன்மத்திலாவது சேரலாம்னு தற்கொலைப் பண்ணிக்க முடிவு பண்ணி கைகாலை கட்டிக்கிட்டு பாலத்து மேல இருந்து விழுந்தோம். விழுந்ததில் என்னோட கட்டு அவுத்துகிச்சி. அதே நேரம் நாம செத்துப் போப்போறோம்னு பயமாயிடுச்சு. அப்பிடிஇப்படின்னு நீச்சல் அடிச்சு கவிதாவை தேடினேன். கிடைக்கல. சாின்னு வீட்டுக்கு வந்துட்டேன்”
“கல்யாணத்துல பிரச்சனைனா பேசாம ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தானே. இப்பதான் போலீஸ் ஸ்டேஷன்லேயே கல்யாணம் கருமாதி எல்லாம் பண்ணி வைக்கறாங்களே. அது சரி உனக்கு போலீஸ்ல சொல்லணும்னு தோணலையா?”
“பயந்துட்டேன் சார். கொஞ்சம் நிதானப் படுத்திகிட்டு கிளம்பும்போது போலீஸ் வந்துட்டார்”
“கொஞ்சநேரம் கழிச்சி வந்திருந்தா சவாரி உட்டுருப்பே!” என்ற இன்ஸ்பெக்டர் நயன head constable பக்கம் திரும்பி, “சரி.. சரி ஏகாம்பரம் இவன் கிட்ட எழுதி வாங்கிக்க. லாயர் கிட்டயும் கையெழுத்து வாங்கிக்க”. என்றார். பிறகு லாயரைப் பாத்து “லாயர் சார். நான் ஏதும் FIR போடலை. திருப்பியும் enquiry ஏதும் கூப்பிட்டா வரணும்;. நான்; totalஆ release பண்ற வரைக்கும் பையன் எங்கும் ஊர் கீர் போகக்கூடாது” என்ற இன்ஸ்பெக்டர் நாற்காலியில் சாய்ந்து உட்காந்தார். “சே! என்ன கேஸ்டா இது. காலங்காத்தால” என்றார் அலுப்புடன்.
பிறகு கவிதாவைப்பார்த்து, “ஏம்மா. புடிச்சப்பொண்ணுதான நீ. இவனைமாதிரி காவாலிபசங்க கூப்பிட்டா உடனே போயிடுவியா? உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்ல. உன்னோட அப்பன் ஆத்தாளைச் சொல்லணும்”. என்ற இன்ஸ்பெக்டர் “யோவ் டிரைவர் ராமசாமிகிட்டச் சொல்லி ஜீப்ல இந்தப் பொண்ணை அவ வூட்டாண்ட உட்டுட்டுவரச் சொல்லுயா. விடியறத்துக்குள்ள பொண்ணு வூடுபோய் சேரட்டும். ராவு பூரா பொண்ணு வரலேன்னு அவ அப்பனாத்தா என்னாபாடு படராங்களோ!” என்றவர், ‘கண்டவன் கஷ்டமெல்லாம் நாம பட வேண்டியிருக்கு’ என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைபேசியில் விடுவிடுவென பட்டனை அழுத்தினார். எதிர்பக்கம் attend பண்ண சற்று நேரம் ஆயிற்று போலும். ‘சே! இந்த காலத்துப் பொம்பளைங்க என்னா தூக்கம் தூங்கறாங்கப்பா’ என்று அலுத்துக் கொள்ளும்போது எதிர்பக்கம் ஒரு பெண் குரல் “அலோ யாருங்க பேசறது?’ என்றது தூக்கக் கலக்கத்துடன்.
“ஜானகி நான்தான் பேசறேன். நம்ப பொண்ணு கல்யாணி எங்கே?” என்றார் சற்று பதட்டத்துடன்.
“உள்ரூம்ல தூங்கறா. என்ன விஷயம்ங்க? எழுபட்டுங்களா?”
“ஒன்னுமில்ல.. சரி சரி தூங்கட்டும் எழுப்பாதே” என்றார் சற்று நிம்மதியுடன்.
ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவழியாக கிளம்பி லாயர் அங்கிளின் தொணதொணப்பிலிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. ஆனந்துக்கு எதுவுமே புயவில்லை. ‘சே! எப்படி ஆச்சு! எங்கே தப்பு செய்தோம்?’ என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கிப் போணான்.
தூக்கம் கலைந்து எழுந்த போது mobile போன் மணி கிணுகிணுத்துக் கொண்டிருந்தது. காலை 10½ ஆகிவிட்டிருந்தது. ஒரு வேளை மறுபடியும் போலீஸா என்ற பதட்டத்தோடு mobile போனை எடுத்தான். எதிமுனையில்.. கவிதா!
- தொடரும்
Subscribe to Posts [Atom]
