Wednesday, February 14, 2007

காதல் போயின்... மினி தொடர் கடைசி பகுதி

காதல் போயின்...


மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்... போலீஸ் ஸ்டேஷனில் கவிதா... இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி என்கிறார். லாயர் அங்கிளின் உதவியோடு விளக்கம் எழுதிகொடுத்துவிட்டு குழப்பத்தோடு வீடு வந்து சேர்கிறான் ஆனந்த். தூங்கி எழுந்தால் போனில் கவிதா!

போனில் கவிதா! விதி துரத்துகிறதா? பயமாக இருந்தது ஆனந்துக்கு. எதற்கு இவள் மறுபடியும் போன் செய்கிறாள்? எச்சரிக்கையாகத்தான் இவளை கையாளவேண்டும்.

“என்ன கவிதா? என்ன விஷயம்?”

“இத்தனை அமளியிலும் என்ன விஷயம்னு எப்படி கேட்க முடியுது ஆனந்த்?”
“கவிதா என்னை நம்பு. எனக்கு என்ன நடந்ததுனே தொியலை. நான் வேண்டும்ன்னே பண்ணலை. எனக்கு உயிர் பிழைக்கணும்னு தோணிண உடனே உன்னைத்தான் தேடினேன் கவிதா. Please என்னை நம்பு.”

“என்னை இதெல்லாம் நம்பச் சொல்றியா ஆனந்த்?”
“God promise கவிதா. உன்னை எப்படி புரியவைக்கறதுனு எனக்குத் தெரியலை”
“நாம இன்னிக்கு சாயந்திரம் 6 மணிக்கு வழக்கமா சந்திக்கிற restaurant -ல meet பண்ணலாம். நீ தவறாம வந்தா உன்னை நம்பறத்துக்கு try பண்றேன்.” கவிதா போனை வைத்துவிட்டாள்.

ஆனந்த் என்ன செய்வது என்று யோசித்தான். வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். போலீஸ்ஸ்டேஷனில் இருக்கும் complaint -ஐ வாபஸ் வாங்க வைக்க வேண்டும். கொஞ்சம் நடிப்புத்திறமையை காட்டினால் கவிதா நம்பிவிடுவாள். எத்தனைபேரை நம்ப வைத்திருக்கிறேன். ஆண் அழுதால் தாங்குவாகளா பெண்கள்? Sentimental -ஆ பேசினா கவுந்திடமாட்டாகளா? எத்தனைப் பேரை கவுத்திருக்கிறேன். கவிதாவை இன்றைக்கு அழுது ஒழித்துவிட வேண்டியது தான். ஆனந்த் மாலை 6 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலை 6:10க்கு restaurant -க்கு கவிதா வந்தபோது ஆனந்த் முன்னதாகவே வந்து காத்திருந்தான். ஒரு மூலையில் டேபிள் பிடித்திருந்தான். கவிதாவை கண்டதும் கையசைத்தான். டேபிள் மீது அவனது mobile phone.

கவிதா மௌனமாக போய் அவனருகில் உட்காந்தாள். வந்த சர்வரிடம் இரண்டு coca-cola ஆடர் செய்தாள். சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்காந்திருந்தாகள். பிறகு கவிதா ஆனந்தின் கண்களைப் பாத்துக் கொண்டு, “ஏன் ஆனந்த்? ஏன் இப்படி பண்ணினே?”

“அது தான் சொன்னேனே கவிதா. இப்படி ஆகும்னு நானே நினைக்கலை. என்னோட கட்டு அவிழ்ந்ததும் எனக்கு பயமாயிடுச்சு. வாழணும்னு நினைப்பு வந்துடுச்சு. உடனே உன்னைத் தேடினேன். நீ கிடைக்காமல் நான் அழுத அழுகை எனக்குத்தான் தெரியும்”
“So, உனக்கு நீச்சல் தெரியும் இல்லையா?

இந்தக் கேள்வியை ஆனந்த் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. “வந்து ஏதோ கொஞ்சம் தெரியும். அதனால தானே நான் நம்ப இரண்டுபேரையும் கயிற்றால கட்டிவிடச் சொன்னேன். தப்பித்தவறி நான் பிழச்சி நீ போயிடக்கூடாதுன்னு தான் கயிற்றால கட்டிக்கிட்டு...”
“அது சரி. நீ எப்படி?”
“நான் S.I.E.T collegeல படிச்சப் பொண்ணு”
“So?” என்றான் ஒன்றும் புரியாமல்.

‘சென்னையிலேயே swimming pool இருக்கிற women’s college என்னோடது. எங்க காலேஜ்ல swimming compulsory’. என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் ‘பச்’ என்றாள் சுவாரசியம் இல்லாமல். “எப்படியோ பிழைச்சேன்” என்னும் போது ஆனந்தின் mobile phone சிணுங்கியது. நம்பரைப் பாத்த ஆனந்த் திடுக்கிட்டான். ஷீலா!. மனதில் bulb எரிந்தது.

“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சற்றுதூரம், கவிதாவுக்கு கேட்காத தூரம் சென்றான். அவன் திரும்ப வந்தபோது இருவருக்கும் coca-cola காத்திருந்தது. கவிதா அந்த coca-colaவையே வெறித்துப் பாத்துக்கொண்டிருந்தாள். “sorry கவிதா என்னுடைய old friend” என்று சொல்லிவிட்டு coca-cola ஒரே மூச்சில் குடித்தபின் கேட்டான் “இப்போ எங்கேயாவது போலாமா கவிதா? சினிமா ஏதாவது?”

“எனக்கு அந்த முட்டுக்காடு பாலத்துக்கு மறுபடியும் போகணும்னு ஆசையா இருக்கு ஆனந்த். போலாமா?” ஆனந்துக்கு சற்று சந்தேகம் வந்தது.
“முட்டுக்காடுக்கா எதற்கு?”
“இல்ல, ஆனந்த் நீங்க என்னைவிட்டு பிரிய முயற்சி பண்றீங்களோன்னு நினைச்சுத்தான் போலீஸ் கேஸ் எல்லாம் கொடுத்தேன். இப்போ நல்லா தெரிஞ்சிபோச்சு எல்லாம் என் தப்புதான்னு. அதான் கொஞ்ச நேரம் முட்டுக்காடு பாலத்துக்குப்போய் பேசிட்டு அப்படியே வழியில் போலீஸ் ஸ்டேஷன் போய் என்னுடைய complaintயும் வாபஸ் வாங்கிட்டு வந்துடலாம்னு..”

ஆனந்துக்கு இது நல்லதாகப் பட்டது. இந்தப் பொண்ணை இப்போது விட்டால் மனசு மாறி... நமக்கும் காலம் கடத்துவது நல்லதல்ல என்று பட்டது.
“முட்டுக்காடுக்கா சரி. நீ ஆசைபடற. அப்படியே நம்ப கல்யாணம் எங்கேன்னு அங்கேயே பேசிக்கலாம்” என்றான் சற்று உற்சாகத்துடன். அவர்கள் முட்டுக்காடு வந்தபோது மணி 8 ஆகிவிட்டிருந்தது. வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல் இருந்தது. நேற்று நிறுத்திய அதே இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான் ஆனந்த். கவிதா நினைத்துக் கொண்டாள். ‘நேற்றைக்கும் இன்றைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?’

“என்ன கவிதா என்ன யோசனை?”
“ஒன்னுமில்ல. நேத்தைக்கும் இன்னிக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். நேத்து சாகத்துடிச்சோம். இன்னிக்கு வாழ ஆசைப் படறோம். சரி கல்யாணத்தை எங்க வைச்சுக்கலாம் எப்ப வைச்சுக்கலாம்?”
“கவிதா போலீஸ் ஸ்டேஷன்ல complaint ஐ வாபஸ் வாங்கிட்டு அப்படியே நேரா கோவிலுக்குப் போய்..”
“அது சரி எந்த கோவில் இந்த நேரத்தில் கல்யாணத்துக்கு திறந்து இருக்கும்? நேரம் காலம் எல்லாம் பாக்க வேண்டாமா?”
“இல்ல கவிதா நான் முடிவு பண்ணிட்டேன். இப்பவே நீ தாலி கட்டுன்னா கூட நான் ரெடி” என்ற ஆனந்த் “என்னவோ தெரியலை கொஞ்ச நேரமா தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. நெஞ்ச கரிக்குது”. என்றான்.

அவன் நிற்கவே சற்று தடுமாறுவது தொந்தது. கவிதா அதை கண்டுக் கொள்ளாமல் “ஆனந்த் அந்த நிலா வெளிச்சம் பாலத்துக்கடியிலே எவ்வளவு நல்லா இருக்கு பாரேன்!” என்றாள்.
ஆனந்த் மிகுந்த பிரயாசைப்பட்டு பாலத்திலிருந்து எட்டிப்பாக்க முயலும்போது அப்படியே தடுமாறி மேலிருந்து தண்ணீல் விழுந்தான். விழுந்தவன் மிகவும் பிரயாசைப்பட்டு நீச்சலடிக்க முயல முடியாமல் சோர்ந்துப் போய் மூழ்குவது தெரிந்தது. அவன் மூழ்கிய இடத்திலிருந்து வட்டவட்டமாய் நீரலைகள் பரவி கடல் அலைகளோடு கலந்தது.

நிலா வெளிச்சம் பாக்க ரம்யமாகத் தொந்தது. கடலில் நிலா தீற்றலாகத் தெரிந்தது. கடலலைகள தட்..தட்டென்று பாலத்தடியில் மோதும் சத்தம் சற்று சங்கீதமாகக்கூட இருந்தது. கடல் காற்று சற்று ஈரப்பசையுடன் இனம்புயாத மணத்துடன்... இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இந்த கடல் தான் எவ்வளவு அழகு! எத்தனை கம்பீரம்!! எவ்வளவு பிரம்மாண்டம்!!!

கவிதா அவன் மூழ்குவதையே கண்கொட்டாமல் பாத்துக் கொண்டிருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து விஷம் என்று சிகப்பு எழுத்தில் எழுதியிருந்த சிறிய குப்பியை எடுத்தாள். “thank you coca-cola” என்று தண்ணீல் வீசியடித்தாள். அது யாருக்கும் அதிக சத்தம் கேட்காமல் ‘க்ளக்’ என்று முழ்கியது. கைப்பையில் இருந்த கடிதங்களை எடுத்தாள். அவளும் ஆனந்தும் அவகள் பெற்றோகளுக்கு எழுதிய, அவள் தபாலில் சேர்க்காத கடிதங்கள். தன்னுடைய கடிதத்தை மட்டும் சுக்கு நூறாகக் கிழித்து தண்ணீல் வீசியெறிந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் வழியில் ஆனந்துடைய கடிதத்தை தபால் பெட்டியில் சேர்த்தாள். “sorryடா ஆனந்த். என் வழி தனி வழி”. வழியில் எதிர்பட்ட ஆட்டோவில் ஏறி வீட்டை அடைந்தபோது மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீட்டு வாசலில் அம்மா. “எங்கடி போயிட்ட?” என்றாள் பதறிப் போய்.

“முக்கியமான உயிர் போற வேலை” என்று முணுமுணுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கப் போணாள். நாளைக்காலை ‘marie stoppes clinic’ போகவேண்டும் என்று நினைத்தவாறே தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை பத்து மணிக்கு முட்டுக்காடு படகுத் துறையில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திலிருந்த ஒருவன் ‘பாவம் சின்ன வயசுப்பா’ என்று பரிதாபப்பட்டான். ‘போலீஸ்க்கு சொல்லியாச்சு. இப்போ வந்திருவாங்க’ என்றான் இன்னொருவன். அந்த சிறு கூட்டத்தின் நடுவில் ஒரு கால் மடங்கி முகமெல்லாம் வீங்கி வாயில் நுரை தள்ளி திறந்த கண்களில் ஈ மொய்க்க... யாரோ ஒரு பரோபகாரி தன்னிடம் இருந்த துண்டால் பிணத்தை மூடினான்.

மறுநாள் தினமலர் பத்திரிக்கையில் எட்டாம்பக்கம் மூலையில் சின்னதாக ஒரு பெட்டிசெய்தி வந்திருந்தது.


வாலிபர் தற்கொலை
சென்னை: முட்டுக்காடு பாலத்திலிருந்து ஒரு வாலிபர் கடலில் குதித்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். கடலில் குதிக்கும் முன்னர் அவர் விஷம் அருந்தியிருப்பது தொிய வந்துள்ளது. அந்த இளைஞன் பெயர் ஆனந்த் என்பதும் அவர் ஒரு பிரபல தொழிலதிபாின் ஒரே மகன் என்பதும் தொியவந்துள்ளது. அவருடைய தந்தைக்கு இறக்கும் முன்னர் எழுதிய கடிதத்தில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் காரணம் என்று தொிகிறது. விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த இளைஞர் ஏற்கனவே ஒருமுறை தன்னுடைய கைகால்களைக் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தொிவித்தார். அந்த முயற்சியில் வெற்றிப் பெறாததால் இம்முறை விஷம் அருந்திவிட்டு கடலில் குதித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.


- : முற்றும் : -