Saturday, April 08, 2006

நினைவுத் துளிகள்

 

நினைவின் ஈரப்பசையில்
மீண்டும்
சிறிதாய் மலரும்
கனவில்
ஒரு பூ!
***
மனதில் கவிதை
மீண்டும் மீண்டும்
எழுதி அழித்ததில்
வலி தான் மிச்சம்...
***
என்னில் என்னை
தொலைத்து விட்டு
உன்னில் தேடும்
அற்பன் நான்!
***
முதிர்கன்னி
மூலைக்கிழங்கள் இரண்டோடு
மூன்றாம் கிழமாய்
மூலையில் நானும்...


No comments: