Sunday, August 09, 2009

மீண்டும் மீண்டும் நான்...

ஏறத்தாழ நான் வலைப்பூத் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் எழுதாததில் தமிழுக்கும் தமிழ் கற்ற சான்றோருக்கும் ஏதும் வருத்தமோ இழப்போ இல்லை என்பது மனதுக்கு (வருத்தம் அளித்தாலும்) இதமாக இருக்கிறது. இதைவிட தமிழ்மணமோ, சக வலைப்பதிவாளர்களோ யாரும் கிஞ்ஞித்தும் மாறாமல் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. நான் மீண்டும் எழுதவேண்டும் என்று யாரேனும் உண்ணாவிரதமோ, போராட்டமோ செய்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில், எல்லோரும் “விட்டது கருப்பு“ என்று சந்தோஷமாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை விடக்கூடாது. ஆக மொத்தம் என்னுடைய வலைப்பூவினை மீண்டும் தொடுக்க நான் வந்துவிட்டேன் என்பதனை கூறி எல்லோரையும் மிரளவைப்பதை தவிற வேறு வழியில்லை.

நான் எழுதுவில்லையே தவிற, வலைப்பூக்களை படித்துக் கொண்டிருந்தேன். அவ்வபோது பின்னூட்டமும் இட்டுக்கொண்டு தான் இருந்தேன். வியாபாரிகளான வலைப்பதிவாளர்களையும், வாள்பிடிக்காத குறையாக சண்டையிட்டவா்களையும் கண்டு கலங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

என்னைப்பொருத்தவரையில் விலைபேசாதவரையில் தான் கலை.

என்னுடைய இந்த அபிப்பிராயத்திற்காக சம்பந்தப்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக!. (மன்னிக்காவிட்டாலும் ஏதும் ஆகிவிடப்போவதில்லை!)

அதே நேரத்தில் புதிதாக முளைத்த வலைப்பூக்களும் அதன் வாசமும் நெஞ்சை கொள்ளைக் கொண்டதையும் கொள்வதையும் சொல்லாமல் இருக்க முடியாது. பழையன கழிதலும்…புதியன புகுதலும் தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்மணத்துக்கும் புதிதல்லவே!

எது எப்படியோ. நானும் என்னால் முடிந்த அளவு தமிழையும் தமிழ்மணத்தையும் கலங்கடிக்க வந்துவிட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

(எங்கப்பா எல்லோரும் தலைதெறிக்க ஓடுராங்க…?)

2 comments:

அன்புடன் அருணா said...

வாங்க...வாங்க...கலக்குங்க!

சந்தர் said...

வருகைக்கு நன்றி, அருணா.