Monday, August 17, 2009

ஒன்னுமே புரியலை உலகத்திலே!

செய்தி 1
ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு ஃப்ளு மாதிரியான காய்ச்சலாம். மாமனார் அமிதாப் பச்சன் மிகவும் வருத்தத்துடன் விஷயத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.அமிதாப்புக்கும் முதுகு வலியாம். அவருக்கும் உடம்புக்கு முடியலையாம். அவரை பார்த்துக் கொள்ள அவருடைய மனைவி ஜெயா பச்சன் அருகில் இல்லையாம். அவர் அமர்சிங் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதால் அவரை கவனித்துக்கொள்ள கடந்த ஒருமாதமாக அவருடன் இருக்கிறாராம். ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு உடம்பு சரியில்லை என்றதும் அமர்சிங் ஏகமாய் கவலையுடன் இருக்கிறாராம்.  மேற்கண்ட செய்தியில் ஐஸ்வர்யா ராய் பச்சனுடைய கணவர் பெயரை நானும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்தேன். ஒரு பத்திரிகையிலும் கண்ணில் படவில்லை. அது சரி. கவலைபடத்தான் நிறையபேர் இருக்கிறார்களே!

                                     

செய்தி 2
ஷாருக்கானை அமெரிக்காவில் இரண்டு மணிநேரத்திற்கு நிற்க வைத்து கேள்வி கேட்டார்களாம். மனிதர் தான் ஆசியநாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எனபதால் தான் இந்த அளவுக்கு மோசமான வரவேற்பு என்பது அவரது வாதம். இனிமேல் அமெரிக்க மண்ணை மிதிப்பதில்லை என்ற சபதம் வேறு. (என்னுடைய ரசிகர்கள் அழைத்தால் அமெரிக்கா செல்வது குறித்து யோசிப்பேன் எனறு ஒரு சப்பைக்கட்டு - அரசியல்வாதிகள் போல!) 
அமெரிக்க மண்ணில் ஷாருக்கானை கேள்விகேட்டு வாட்டிய அன்றே, உலகம் முழுவதும் தெரிந்த பாப் டைலான் எனற பாடகரையும் கேள்வி கேட்டுத் தொலைத்தெடுத்திருக்றார்கள். அவருடைய  ஐ.டி கார்டை கேட்டு குடைந்தி ருக்கிறார்கள். இத்தனைக்கு அவர் அமெரிக்க நாட்டவர் என்பது கூடுதல் செய்தி.  
இவ்வளவு ஏன்? மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான். எப். கென்னடியின் சகோதரர் செனட்டராக இருந்த போதிலும் விமானம் ஏறவிடாமல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர் பெயரில் இருந்த கென்னடி என்ற பெயரில் ஒரு தீவிரவாதியின் புனைப்பெயர் இருந்தது தான் காரணம். அமெரிக்கர்களின் கெடுபிடியில் ஒபாமா மாட்டாமல் இருந்தால் சரி!


 செய்தி 3

நடிகை ஸ்னேகாவுக்கு குருந்தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்த்தாக ஒரு பெங்களுர் தொழிலதிபரை கைது செய்திருக்கிறார்கள். நடிகை ஸ்னேகா தன்னுடைய செல்போனின் எண்களை மாற்றியபோதும் அதுகுறித்து தெரிந்துக்கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்தாராம். போதாதகுறைக்கு நடிகை ஸ்னேகாவின் தந்தைக்கு வேறு போன் செய்து பெண் கேட்டாராம். நடிகை போலீஸில் புகார் கொடுக்க தொழிலதிபரை புழலில் வைத்து விட்டார்கள். தொலைக்காட்சியில் அவரை கைது செய்து போன காட்சியை காட்டும்போது தன் முகத்தை ஒரு கடிதம் போலிருந்த பேப்பரில் மறைத்துக் கொண்டார். ஒரு வேலை நடிகைக்கு எழுதிய காதல் கடிதமா என்பது தெரியவில்லை.

 செய்தி 4

எம்ஜியார் நினைவிடத்திற்கு வெடிகுண்டு வைத்த்தாக ஒருவர புரளி செய்து அதுவும் அவசரபோலீஸ் 100 க்கு போன் செய்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர ஆம்பூரை சேரந்தவராம். அடிக்கடி சென்னை வருவாராம். அவ்வாறு அவர் சென்னை வந்த சுபதினத்தில், அவரது செல்போனில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் போன் செய்ய இயலவில்லையாம். எமர்ஜென்ஸி கால்கள் மட்டும்செய்ய முடிந்த்ததாம். அவருக்கு மிகவும் போர் அடிக்கவே போலீஸ் எமெர்ஜென்ஸிக்கு போன்செய்து வெடிகுண்டு புரளி செய்தாராம். ஆம்பூர் அண்ணனுக்கு சென்னை போலீஸ் பற்றித் தெரியாது போலிருக்கிற்து. அவரை கோழி அமுக்குவது போல அமுக்கி புழலுக்கு அனுப்பிவிட்டார்கள். இனிமேல் அவருக்கு கண்டிப்பாக போர் அடிக்காது!






1 comment:

ஷாகுல் said...

தொழிலதிபர்னு சொல்றாங்க 5000 கோடி இருக்குனு சொல்றாங்க. பின்ன எதுக்கு கவலபடனும் நம்ம சரவனா ஸ்டோர்ஸ் அன்னாச்சிய பாலோ பன்னலாமே.

எதுக்கு தேவ இல்லாம மிரட்டனும்.