Sunday, May 07, 2006

எப்போதோ எழுதியது

உனக்கும் எனக்கும் இரவுகள் ஒன்றா
விடியல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் கனவுகள் ஒன்றா
நினைவுகள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் துயரங்கள் ஒன்றா
ஆறுதல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் காதல் ஒன்றா
கண்ணீர் கவிதைகள் ஏன் உனக்கில்லை?

No comments: