Wednesday, January 31, 2007

காதல் போயின்...2 (மினி தொடர் பாகம் 2)

காதல் போயின்

மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்...

ஆனந்த் உணர்வுக்குவர சற்று நேரம் பிடித்தது.
“இங்கே ஆனந்த்ன்றது யாரு?” சரியான போலீஸ் தோரணை.
“நா.. நான் தான்”
“இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டியாரச் சொன்னார்”
“ஏன்? எதுக்கு?”
“அதெல்லாம் தெரியாது. ஸ்டேஷனுக்கு வந்து தெரிஞ்சிக்குங்க”
“விடிஞ்சதும் வரேன்”
போலீஸ்காரர் குரல் மாறியது. “யோவ். முதல்ல ஜீப்ல ஏறுயா”
ஆனந்த் ஆடிப்போனான்.
“டிரெஸ் மாத்திகிட்டு வந்துடரேன்” என்றான் கீழ் ஸ்தாயில்.
“சீக்கரம் ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார் போலீஸ்.
ஆனந்துக்கு என்ன ஏதுவென்று புரியவில்லை. கவிதாவுடைய dead-bodyயை இதற்குள் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. ஒருவேளை தப்பி பிழைத்திருப்பாளோ? இல்லையே! அவள் உள்ளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததே. வந்து காப்பாத்தக்கூட யாரும் அருகில் இல்லையே!

அந்தக் குழப்பத்தோடு family லாயர் தினேஷ்க்கு போன் செய்தான். ஐந்து ரிங் அடித்தப்பின்பு லாயர் தினேஷ் அரைகுறையான தூக்கத்துடன் ‘ஹலோவ்’ என்றார்.
ஆனந்த் அவரிடம் போலீஸ் தன்னை அழைத்துக்கொண்டு போக வந்திருப்பதை அழாதகுறையாக தெரிவித்தான்.

“என்ன விஷயம்? தப்புதண்டா ஏதாவது செஞ்சியா என்ன? சிங்கப்பூரில் இருக்கிற உங்கப்பன் கேள்விபட்டா என்னை கொன்னுடுவான்”
“இல்லை அங்கிள். நான் எதுவும் பண்ணலை”
“சரி சரி. நீ அவங்களோட போ. நான் போலீஸ் ஸ்டேஷன் வரேன்.”

ஆனந்த் டீசர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வீட்டு வாசலை அடைந்தபோது போலீஸ் கடுகடுவென்று இருந்தார்.
“எவ்ளோ நேரம்யா. அப்படியே ‘டிமிக்கி’ குடுக்கலாம்னு பாக்கறியா?”

ஆனந்துக்கு என்ன ஏது என்று யூகிக்க முடியாவிடினும் ஏதோ விபரீதம் என்று உ.கை.நெ.கனியாக புரிந்தது. லாயர் அங்கிள் சீக்கிரமாக வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டு ஜீப்பில் ஏறினான்.
ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது அதிகாலை மணி 3 ஆகிவிட்டிருந்தது.
வானம் குளிருக்கு மேகத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளி பனிபடுகை ஊடே சன்னமாகத் தெரிந்தது. விழித்திருந்த யாவிலும் இரவுப் பணி செய்த களைப்பு தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷனை ஒட்டிய டியூப்லைட்டின் வெளிச்சம் அதன் கம்பத்துக்கே போதுமானதாக இல்லை. அருகில் இருந்த டீ கடையை திறக்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த நாயர் அநியாயத்திற்கு பாலில் தண்ணீரை விளாவிக் கொண்டிருந்தார். சைக்கிளில் சென்ற நைட் ஷிப்ட் முடித்த இருவர் தங்கள் சூபவைசரை கெட்ட வார்த்தையில் சத்தமாகத் திட்டிக்கொண்டு சென்றார்கள் ஒதுங்கிய ஒற்றை நாய் ஜீப் அருகில் வந்துவிட்டு போலீஸ் லட்டி பயத்தில் வேகமாக எட்டிச் சென்றது.

“உள்ள போய்யா” என்றார் போலீஸ். கொஞ்சம் விட்டால் கழுத்தை நெட்டித் தள்ளுவார் போலிருந்தது. உள்ளே நுழையும்போது லாயர் தினேஷ் எதிர்பட்டார்.
“எதுவும் கவலைப்படாதே. எல்லாத்தையும் இன்ஸ்பெக்டாிடம் பேசிட்டேன். அது சரி அந்த பொண்ணை ஏண்டா கொலை பண்ற லெவலுக்குப் போனே?”

ஆடிப்போணான ஆனந்த். “எந்தப் பொண்ணு?”
“அது சரி. ஒண்ணு ரெண்டுன்னா ஞாபகம் வைச்சுப்பே!”

“உள்ள போய்யா” என்றார் போலீஸ் மறுபடியும்.
“வாய்யா மன்மதா” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. “பயங்கரமான ஆளய்யா நீ. உன்னையெல்லாம் straight- ஆ encounter -ல போட்டுத் தள்ளணும்”

“இன்ஸ்பெக்டர். நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்றார் லாயர்.
“மொதல்ல இந்த லாயரை போட்டுத் தள்ளணும்” என்று முணுமுணுத்தவாறே, “ஏம்மா லட்சுமி அந்தப் பொண்ணை இட்டாமா” என்றார் வெறுப்புடன்.

அந்தப் பொண்ணு என்றதும் ஆனந்த் நிஜமாகவே அதிர்ந்துப் போணான். என்ன எப்படி என்று யோசிப்பதற்குள் உள்ளிருந்து கவிதா பெண் போலீஸ் துணையுடன் சற்றே ஈரத்தலையுடன் ஈர உடையுடன் உள்ளிருந்து வெளியே வந்தாள். ஆனந்தை கண்ணுக்குள் பார்க்க முற்பட்டாள். ஆனந்த் தலையை தாழ்த்திக் கொண்டான்.

“இந்தப் பொண்ணை நீ கொலை செய்ய முயற்சி செய்ததாக complain செய்திருக்காங்க. இதுக்கு நீ என்னா சொல்ற?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இன்ஸ்பெக்டர் சார் இந்தப் பையனும் அந்தப் பொண்ணும் தற்கொலை பண்ணிக்க பாத்திருக்காங்க. அதுல இவன் முதல்ல பொழச்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு அப்புறம் பொழச்சு எழுந்து பாத்திருக்கிறாங்க. இவன் இல்லாததனால கொலை அது இதுன்னு...”

“லாயர் சார். பையனை enquiry பண்ணும்போது நீங்க கொஞ்சம் சும்மா இருங்க”
“பையன் சார்பாத்தான் பேசறேன்”
“அதெல்லாம் கோர்ட்ல வைச்சுகங்க. நீங்க இது போல பேச ஆரம்பிச்சா பையனை இப்பயே கொலை முயற்சி அது இதுன்னு உள்ளத் தள்ள வேண்டி வரும். நான் இப்போதைக்கு 309ல விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். அநாவசியமா என்னை 120,307ல எல்லாம் கேஸ் போட வைச்சிராதிங்க. 10 வருஷம். non-bailable வேற. தெரியுமில்ல? தம்பி நீ சொல்லு இன்னா நடந்துச்சு?”
----------------------------------------------------------------------------------------------------------------------------
IPC 309. Attempt to commit suicide: Whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, shall he punished with simple imprisonment for a term which may extend to one year 151[or with fine, or with both].
IPC 307. Attempt to murder : Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty or murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 104[imprisonment for life], or to such punishment as is here in before mentioned.
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனந்துக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி கோவையாகச் சொல்வது என்று புரியாமல் சற்று மௌனமாக இருந்தான். பிறகு நிதானப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தான்.
“சார், நானும் கவிதாவும் lovers சார். வெவ்வேற ஜாதி. எங்கப்பாவும் சாி அவள் அப்பாவும் சாி ரொம்பவும் prestige பாக்கறவங்க. அடுத்த ஜன்மத்திலாவது சேரலாம்னு தற்கொலைப் பண்ணிக்க முடிவு பண்ணி கைகாலை கட்டிக்கிட்டு பாலத்து மேல இருந்து விழுந்தோம். விழுந்ததில் என்னோட கட்டு அவுத்துகிச்சி. அதே நேரம் நாம செத்துப் போப்போறோம்னு பயமாயிடுச்சு. அப்பிடிஇப்படின்னு நீச்சல் அடிச்சு கவிதாவை தேடினேன். கிடைக்கல. சாின்னு வீட்டுக்கு வந்துட்டேன்”

“கல்யாணத்துல பிரச்சனைனா பேசாம ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தானே. இப்பதான் போலீஸ் ஸ்டேஷன்லேயே கல்யாணம் கருமாதி எல்லாம் பண்ணி வைக்கறாங்களே. அது சரி உனக்கு போலீஸ்ல சொல்லணும்னு தோணலையா?”

“பயந்துட்டேன் சார். கொஞ்சம் நிதானப் படுத்திகிட்டு கிளம்பும்போது போலீஸ் வந்துட்டார்”

“கொஞ்சநேரம் கழிச்சி வந்திருந்தா சவாரி உட்டுருப்பே!” என்ற இன்ஸ்பெக்டர் நயன head constable பக்கம் திரும்பி, “சரி.. சரி ஏகாம்பரம் இவன் கிட்ட எழுதி வாங்கிக்க. லாயர் கிட்டயும் கையெழுத்து வாங்கிக்க”. என்றார். பிறகு லாயரைப் பாத்து “லாயர் சார். நான் ஏதும் FIR போடலை. திருப்பியும் enquiry ஏதும் கூப்பிட்டா வரணும்;. நான்; totalஆ release பண்ற வரைக்கும் பையன் எங்கும் ஊர் கீர் போகக்கூடாது” என்ற இன்ஸ்பெக்டர் நாற்காலியில் சாய்ந்து உட்காந்தார். “சே! என்ன கேஸ்டா இது. காலங்காத்தால” என்றார் அலுப்புடன்.

பிறகு கவிதாவைப்பார்த்து, “ஏம்மா. புடிச்சப்பொண்ணுதான நீ. இவனைமாதிரி காவாலிபசங்க கூப்பிட்டா உடனே போயிடுவியா? உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்ல. உன்னோட அப்பன் ஆத்தாளைச் சொல்லணும்”. என்ற இன்ஸ்பெக்டர் “யோவ் டிரைவர் ராமசாமிகிட்டச் சொல்லி ஜீப்ல இந்தப் பொண்ணை அவ வூட்டாண்ட உட்டுட்டுவரச் சொல்லுயா. விடியறத்துக்குள்ள பொண்ணு வூடுபோய் சேரட்டும். ராவு பூரா பொண்ணு வரலேன்னு அவ அப்பனாத்தா என்னாபாடு படராங்களோ!” என்றவர், ‘கண்டவன் கஷ்டமெல்லாம் நாம பட வேண்டியிருக்கு’ என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைபேசியில் விடுவிடுவென பட்டனை அழுத்தினார். எதிர்பக்கம் attend பண்ண சற்று நேரம் ஆயிற்று போலும். ‘சே! இந்த காலத்துப் பொம்பளைங்க என்னா தூக்கம் தூங்கறாங்கப்பா’ என்று அலுத்துக் கொள்ளும்போது எதிர்பக்கம் ஒரு பெண் குரல் “அலோ யாருங்க பேசறது?’ என்றது தூக்கக் கலக்கத்துடன்.
“ஜானகி நான்தான் பேசறேன். நம்ப பொண்ணு கல்யாணி எங்கே?” என்றார் சற்று பதட்டத்துடன்.
“உள்ரூம்ல தூங்கறா. என்ன விஷயம்ங்க? எழுபட்டுங்களா?”
“ஒன்னுமில்ல.. சரி சரி தூங்கட்டும் எழுப்பாதே” என்றார் சற்று நிம்மதியுடன்.

ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவழியாக கிளம்பி லாயர் அங்கிளின் தொணதொணப்பிலிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. ஆனந்துக்கு எதுவுமே புயவில்லை. ‘சே! எப்படி ஆச்சு! எங்கே தப்பு செய்தோம்?’ என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கிப் போணான்.


தூக்கம் கலைந்து எழுந்த போது mobile போன் மணி கிணுகிணுத்துக் கொண்டிருந்தது. காலை 10½ ஆகிவிட்டிருந்தது. ஒரு வேளை மறுபடியும் போலீஸா என்ற பதட்டத்தோடு mobile போனை எடுத்தான். எதிமுனையில்.. கவிதா!


- தொடரும்

No comments: